அலைகள்
இத்தனை யுகங்களாய் இந்த அலைகள், கரைகளோடு அப்படி என்ன தான் பேசுமோ? இப் பொறுப்பற்ற மாந்தர் தம் செயல் கண்டு அவை கண்ணீர் விடத்தானோ இல்லை, தம் இலக்கு நோக்கிய கேள்வியுடன் தானோ எங்கோ பிறந்து எங்கிருந்தோ விரைந்து இன்று, இக் கரைகளோடு பேசிமகிழ்கின்றன, அலைகள் இத்தனை காலமாய், தம் உடன் பிறந்த நீரினங்களை அழைத்து, ஒரே திசையில் உழைக்கின்றன அலைகள் கடல்களின் வசீகரம் அலைகள், பலவற்றை கற்பிக்கின்றன அலைகள்.