வர்ணங்கள்
பிரம்மன் படைப்பில்
சிறந்தன வர்ணங்கள்
வான் நீலம் கொண்டு
தன்னிறம் மாற்றி
கடல் கொள்கிறது நீலம்
சிறிதே பச்சை சேர்த்து
சமைக்கின்றன இலைகள்
மூலங்கள் சேர்க்கை
எத்தனை ஜாலமோ
நிறங்கள் சேர்க்கையில் - சற்றே
கோபம் கொண்ட இறைவன்
முள்ளோடு சேர்த்து
சிவப்பைப் படைத்து
முள்ளைக்கிள்ளி கறுப்பில் படைத்து - அக்
கறுப்பும் சற்றே வெள்ளையுறக் கண்டவன்
சிறிதே பொன் தூவி
வாழ்த்தி அதனை
தலைதன் உச்சியில்
பிரதிஷ்டை செய்து
சற்றுக்கீழே இரு அணைகள் அமைத்து
இடையே இரு குளங்கள் கட்டி - அவை
பலவர்ண நிறங்களில்
ஜொலிக்கக்கண்டவன் - அவனே
பிரமித்துப் போனான் பிரம்மதேவன்
பெண்களை படைத்து
கோலத்தில் வர்ணமிட்டான்
மழலையைப் படைத்து
உலகிற்கே நிறமளித்தான்
வர்ணங்கள் வாழீ
பிரம்மன் படைத்த படைப்புக்களைப் போன்று தங்களது படைப்பும் அருமைய்க உள்ளது💫
ReplyDeleteமிக்க நன்றி தோழி! என்றும் உனது முதல் விமர்சனம் தொடர வேண்டும். நன்றி!
DeleteThanks a lot for supporting me this much Nivea! Enjoy :)