மேகங்கள்
வான் அடி மேகங்கள்
அடையத் துடிக்கும் கால்கள்வரையத் துடிக்கும் விரல்கள்
ஆனால்,
என்னைக் கண்டு அவை - அலைந்து
பறந்து மறைந்து போவதேனோ?
மனதில் துடிக்கும் எண்ணங்களே மேகங்களாய்
சேர்ந்து, திரண்டு, வளைந்து, நெளிந்து
பஞ்சுக்குவியலாய் வானை நிறைத்து,
அப்பாலுக்கப்பாலாய்,
அண்டம் பரந்து
எண்ணச்சிறகுகள் களைத்து
தளர்ந்திடும்வரை
வளைந்து வளைந்து
எண்ணங்களே வண்ணங்களாய்
பேரண்டம் பரவிடும்
மேகக்கூட்டம்
எண்ண மேகம் மனதிலும்
செந்நிற மேகம் நிஜத்திலும்
விரிக்கிறேன் எண்ணச்சிறகினை
அண்டம் கடந்து பறக்கும் ஆவலுடன்.
உங்கள் கவிதைகள் அண்டம் கடந்து பறக்க வாழ்த்துக்கள் நண்பி 🙌🏻
ReplyDeleteதொடர்ந்ததொரு வாழ்த்துதலுக்கான நன்றிகள். தொடர்ந்தும் உன் வாழ்த்துக்களும் துணையும், மேலும் உயரம் தொட வைக்கும் எனும் நம்பிக்கையில், உன் அன்பு நண்பி :)
ReplyDeletelovely poem with inspiring lines :)
ReplyDeleteThanks a lot. Keep supporting :)
Delete