அன்னை

பத்துத் திங்கள் தன்னில் சுமந்து 
உலகை அறிவித்தவள்  
உண்டி கொடுத்து பராமரித்து 
மகிழ்ச்சி அடைகின்றவள் 
வண்ண வண்ண உடை உடுத்தி 
அழகு சேர்க்கின்றவள் 


பள்ளி கூட்டி சென்று பாடம் 
பயிற்றுவித்தவள் 
பள்ளிக்கூடம் முடிய அதிக 
நேரம் சென்றாலும் 
சலித்திடாமல் சூடு தாங்கி 
கூட்டிச் செல்பவள் 
நோய்நொடிகள் பக்கம் வந்தால் 
அஞ்சிப் போபவள் 
பசிஉறக்கம் பாராதென்னை 
கவனித்திருப்பவள் 
அன்னை பாதம் நிதம் பணிந்து
அவள் மனம் போல
அன்புடனே அருகிருப்போம் 
அவள் காலமெல்லாம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

வர்ணங்கள்

அலைகள்

நான் ஒரு அப்பா...